Suryaa Sathriyan   (சூர்யா சிவன்)
643 Followers · 109 Following

read more
Joined 13 July 2018


read more
Joined 13 July 2018
17 MAR AT 17:58

மாறுமா நீ தந்த
மாய தாயமா ஆசையிசையா
மோகமோ! வாழ்வா மேகமே
தேயுதே தாளாதா துவளுவது!
நீயோநீ துதித்திது காலவிலகா
தானதுனதா மைவிழிவிமை தாராதா!
வாடவா விழியழிவி தானிதா
மாயமா நீயும்! காதலும்!

-


9 MAR AT 3:07

ஆற்றும் யாவும் ஐந்துள்
உயிரும் சேரும் திருவடியே
அணுவணுவும் இதமுற நெறியில்
மெய்வார்க்கும் சிரசின்பூ உளதாய்
ஏழுமொருங்கே மையின் பற்றில்
மூன்றாம் மையும் தெளிவுளதாய்
ஆறும் உணர்த்தி புலனும்
நெடுவே தவம் அடியேசிவன்

-


22 JAN AT 19:37

வான் சிவக்கும் கதிரொளியின்
செழுமை நீலம் நிறைத்தாற்போல்
பிறக்குந் திங்கள் காலம் - முழுமையும்
நன்மை சேர்வாழ்வும்! புதுவரவும்!
நல்உள்ளம் நாலும் கூடியிணையும்
பண்பதை உயிர் சேர்க்கும்
செங்கதிர் அறுவடைக்கு போற்றிய
வானும்! நீரும்! ஏறும்! மண்ணின்
நற்குண மாண்பை ஏந்தும்
தமிழ்க்குடியில் நிறைந்து வாழ்வோம்!

-


9 JAN AT 6:36

நான்கிமை புனைந்த ஓவியத்தில்
ஆயுள் முழுமையும் வர்ணமிடும்
மருளொயின் சுடர் சிவக்கும் - மயில்
விழிவெண்மை தாங்கிடும் பாரம்
ஆழியும் கூடுமோ! நிதமும்
ஏந்தும் கரைவரும் அலைநோக்கி
மைதொட்ட விரகளின் காத்திருப்பு
அறிந்திருக்குமோ நெற்றியின் குங்குமம்

-


4 JAN AT 22:45

அலாதி அன்பினில்!

உயிர் கொள்ளும் சுவாங்களில்
குணம் எண்ணாத நற்குணம் - உண்டு
ஆவெண் நுரையில்லா மனத்தினில்
அள்ளி வரும் ஆத்மம் உள்ளோடு;
அணுக்கள் வகுக்கும் நூற்றில்
ஈர்ப்பின் மைதொட்டு நேர்மறை உந்தும்
அன்பின் களம் கொண்டதன்
பற்றில் சேரும் உயிர்கள் எவையும்
விளிம்பில் நிழல் வார்க்கும்
மேகங்களாய் நகர்ந்து வந்திதம் - காட்டிடும்
கனிந்த பண்பில் நிறைவாய்
அன்பின் முழுமை அரவணைத்து கொண்டும்
கதிர்க்கீற்று வந்து மோதியதும்
பனிதுளியாய் கரைந் தோடும் மென்மை
அன்பும் நிறைந்த ஒற்றை
குடையில் தான் வாழ்க்கையும்! மனிதனும்!

-


3 JAN AT 21:35

பார் விழிக்கும் கதிரொளியில்
சிவந்து வெட்கும் வானும்
முதற்பொழுதில் முணுகி நிற்கும்
செங்குள தாமரை இலையில்
மொட்டு மறைந்து ததும்பும்
நீர்மேற் ஆழியின் முத்துக்களாய்
இரவு நீண்டு காத்திருக்கும்
காதலில் பனியும்! நிலவும்!

-


27 DEC 2023 AT 8:34

அணிந்து வரும் திருநீறு தொட்டு
முதல் துளியேந்தி நிற்கும்நுதல் பற்றில் - அண்டம்
அள்ளி வரும் ஆனந்தத்தின் அமுதன்
ஆழ்மனதினுள் அனுதினம் ஓங்கிநிற்கும் சிவமே!

ஆற்றல் உண்டு ஆறாம் மையில் நிதமும்
சொல்லிச் சொல்லி காலம் சிவன் அடியில்
ஏற்றம் நிறைந்திருக்கும் மனத்தினில் ஆரகழன்
திரிசூல் காத்து வருமிந்த ஞாலம்

கண்டவிழி சாயாது நின்சந்தன திருமுகமும்
குவிந்து நிற்கும் கரங்கண்டு முந்திவரும் - மனமும்
ஆறா நெஞ்சதனை ஆற்றுபடும் பதியினில்
ஐயெழுத்து மிந்திரத்தில் இந்த உயிரும் அந்த சிவமே!

-


24 SEP 2023 AT 19:07

உந்தன் செவ்விழி நிழலேந்தும்
இமை ஒற்றையில் எந்தன் நினைவும்!
உந்தன் கார்மணியில் நிறைந்து
ததும்பும் ஆர்ப்பரிப்பில் எந்தன் அரவணைப்பும்!
உந்தன் இருதய சுவாசங்களில்
முறையொன்றில் நுழைந்திர ஏங்கும் உயிரும்!
உந்தன் நிறைவிழியின் துளிகளில்
கசிந்திட தவமேற்று கிடக்கிறது எந்தன் - காதல்!

-


12 SEP 2023 AT 19:03

சுவாசங்கள் உயிர் மாற்றி
இதழ்கள் அமிழ்தம் தேடிவரும்
வெள்ளத்தினை தடுக்கும் மடையெதுவோ;
நான்கிமையும் ஆகாசம் நிறைந்தபின்!
தண்டை விழுங்களின் ஆர்ப்பரிப்பினை
ஆற்றுப்படுத்தும் ரேகை பிணைப்பும்
சொரிந்து வரும் காதல்குமுழிகளை
தள்ளிரசிக்கிறதோ நிலவும்! மீனும்!

-


3 SEP 2023 AT 21:24

அக்னிச் சிந்தனைகள்

-


Fetching Suryaa Sathriyan Quotes