சந்திப்பு
எங்கு கண்டாலும் ஒரு புன்னகை!
மறைக்க முயன்றும் குறைவில்லாமல்
வெளிவரும் சிறு புன்னகை
பேசத் துடிக்கும் உதடுகளை
புன்னகைத் தடுக்கும் துரதிஷ்டம்
பல முகங்களுள் ஒரு முகம்
தெரியும் அதிசயம்!
இரைச்சலும் இசையாய்
இனிக்கும் ஆச்சிரியம்!
குரலிசைக்கு செவி சாய்த்து
மதியிழக்கும் இனிய இன்னல்
விழியோடு விழி சேர்க்க அஞ்சி
சேராமல் பிரிய மனமுமில்லாமல்
இருவிழி கோர்த்து பிரியும்
ஓர் நொடிப் பொழுதில்
விழிமலரில் துளிர்விடும்
பனித்துளி தான் காதலோ
விழியசைத்து சம்மதம்
தெரிவிக்க தாமதம் ஏனோ
என் காதல் மானே!
-