தனக்கு நடந்தா வலிக்குது ,
பிறர்க்கு நடந்தா சிரிக்குது,
என்ன ஒரு கொடூர மனநிலை....-
#இளந்தமிழ்
#Black&browN_(B.❤️.N)
#வாழ்வின்_துவக்கம்_25.04
#உலகத்தை_நேசி_ஒருவரைய... read more
தோழி அவள் கண் கலங்க - தோழனாக
தோற்று போனேன்...
நண்பி அவள் மனம் வருந்த - காரணமும்
நான் ஆனேன்...
வாய் கொழுப்பில் வந்த வார்த்தை - காயம்
செய்து போனதோ...
அக்காயம் போக்கும் மருந்தாக - நம் நட்பும்
இங்கு மாறுதோ...
மாற்றம் ஒன்றே மாறாதது - மறந்து
விடு தோழியே...
மீண்டும் இது போல் நிகழாது - என்னை
மன்னி நண்பியே...!
Sry .......
#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை....-
முதல் முத்தம்.....
முதல் முத்தத்தில் இதழ்களை தொலைத்ததுண்டா...
முதலில் முத்தம் என்றால் என்ன?
முத்தம் மோகம் தீர்க்கும் இச்சை அல்ல - அது காதலில் கேட்டு கிடைக்கும் பிச்சை...
தன் துணையின் விரல் தீண்ட இருந்த பயம் சற்று விடப்பு எடுக்க - அவள் பக்கம் மெல்ல நகர்ந்து...
விழிகள் நாற்புறமும் நோட்டமிட ,
நோக்கும் கணத்தின் இடையிலேயே பிரசவித்தது அந்த முதல் முத்தம்..
என் இலக்கு என்னவோ அவள் இதழ் தான்,
ஆனால்,
அந்த சூழலும் என் பதற்றமும் - என் இலக்கை எட்டவிடவில்லை...
மாறாய் அவள் கன்னத்தையே எட்டியது என் முதல் முத்தம்....
முத்தத்தின் நறுமணம் யாதென கேட்டால் - அன்று அவள் பூசியிருந்ந
(பாண்ட்ஸ் பவுடர்) வாசமென்றே உறைப்பேன்...
என்று சொல்லி சிரித்தார் அந்த 60 வயது மதிக்கத்தக்க
பெரியவர்.....
#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை...-
கீழே இருந்தால்,
தன்னை அகற்றி விடுவார்களோ
என்ற அச்சத்தால் - கிடைக்கும்
உயரமான இடங்களை எல்லாம்,
தனது இருப்பிடமாய்
மாற்றி கொள்கிறது இந்த கொடிகள்....
இடம் : அரசர்
மேல்நிலைப்பள்ளி (தஞ்சை)
#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை...-
ஆணோ!
பெண்னோ!
கருப்போ!
சிவப்போ!
உன் அழகு முகத்தை கண்டிடவே, என் நெஞ்சம் ஆசை கொண்டிடுதே...
வஞ்சம் இல்லா உன் அன்பில்,
தஞ்சம் கொள்ள ஏங்கிடுதே...
கஞ்சம் இல்லா உன் சிரிப்பில் எம்மை கொள்ளை கொள்வாயா...
உன் பிஞ்சு விரலை பிடித்துக் கொண்டு - இப்பிரபஞ்சம் மொத்தம் வலம்வருவேன்...
நின் ஆசை யாவும் நிறைவேற்றி - உன் சித்தி நானும் மகிழ்ந்திடுவேன்....
#ஆவளோடு_உன்_வருகையை_என்னி...
-
அன்று விட்ட பம்பரம் இன்றும் என் நினைவில் சுற்றி கொண்டிருக்கிறது...
சேமித்த காசும் பத்தாமல் போக - அலமாரி இடுக்கில் அகப்பட்ட காசு,
என்கண்முன் தென்பட்டது,
அளவில்லா ஆனந்தம் - அப்போதே புறப்பட்டேன்....
கடையின் முன் முகப்பு என் உருவத்தை மறைக்க - அண்ணா ஒரு பம்பரம் என நான் கேட்டு நிற்க...
கடைக்காரர் தேடினார் என்னை - நான் தேடினேன் பம்பரம் இருக்குமிடத்தை...
அந்த பம்பர கூட்டத்தில்,
எனக்கு பிடித்த வண்ணத்தில் - பம்பரத்தை பெற்று கொண்டு கடை விட்டு நகர்ந்தேன்...
சாட்டையின் உயர்த்தின் பாதி வரை சுற்றி விட்டு - பம்பரத்தை கீழே விட பம்பரமோ சுழளவில்லை...
மாறாக என் நண்பனே என்னை சுழன்றான் - டேய் டேய் நா ஒரு வாட்டி டா என்று...
சரி ஆனது ஆகட்டும் என - பல முறை படை எடுத்து இறுதியில் சுழன்றது பம்பரம் - அது இன்று வரை சுழல்கிறது என் நினைவில்...
#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை...-
துணிக்கடையில் ஆயிரக்கணக்கான புது புடவைகள் - அவை யாவும் அழகில்லை....
ஏனோ அவள் உடுத்திய
கடை சீருடை
தான் - எம்மை கடத்தி செல்கிறது...
#SALES_GIRL...
#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை...-
நீளும் இரவையும்
நினைவில் அவளையும்
எண்ணியபடி...
அவள் நினைவை வரவு வைத்து
இந்த இரவை செலவு செய்து கொண்டிருக்கின்றேன்...
#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை...-
அம்மா
அன்னை தந்தை இரண்டுமாய் என் அருகில் நீ இருந்தாய் - உனை விட்டு பிரிந்து நாங்கள் படும் வேதனைகள் கொஞ்சமல்ல...
உன்னை விட்டு செல்லும் என்னத்தில் வெளிநாடு செல்லவில்லை - நீ பெத்த பிள்ளை நான் என்று ஊர் சொல்லவே புறப்பட்டேன்...
எத்தனையோ ஆசைகள் அத்தனையும் பெரிதல்ல - உன் ஒற்றை புன்னகை ஒன்றுதானே என்னுடைய பேராசை...
உன் முகத்தை பார்துதானே என் விடியல் விடியுதம்மா - உன் மடியில் உறங்கும் நாளை என்னி என் இரவும் கழியுதம்மா...
உன் காயம் போக்கும் மருந்தாக
காலம் சொல்லும் பதிலாக - உன்னை காண நான் வருவேன் அதுவரையில் பொருத்திடம்மா...
-
அலைபாயும் மனதிற்கு அத்தனை ஆசைகள்,
நிறைவேறும் என்னத்தில் நித்திரைக்கு சென்றேன்......
அனைத்தும் கனவாய் விடிந்த பின் கலைந்தது,
தொலைத்த ஆசைகளை வின்மீன் வெளிச்சத்தில் தேடுகிறேன்...
கிடைக்காதென தெரிந்தும்....
#கிறுக்கனின்_கிறுக்கல்_பிழை...-