அவள் பாதம் பட்டு படரத்தான்,
கடல் நீரும் அலைகளாய் ஆகிறதோ?
அவள் முகத்தில் அழகை கூட்டத்தான்,
நிலவும் ஒளியை பொழிகிறதோ?
அவள் குரல்வளை புகுந்து சென்றிடத்தான்,
காற்றும் தென்றலை தூண்டுகிறதோ?
அவள் மேனியில் உயிர் வாழ்ந்திடத்தான்,
பருத்தியும் நூலாய் திரிகிறதோ?
அவள் அங்கம் அனைத்தும் அறிந்திடத்தான்,
மழையும் சாரலை தூவுகிறதோ?
அவள் அழகை கவியாய் ரசித்திடத்தான்,
இறைவனும் என்னை படைத்தானோ?
-