'உன் பாதம் தரையை முத்தமிட விட மாட்டேன்!'
- என்றான் என் காதலன்!
'அதை உண்மையில் நிகழ்த்திக் காட்டி விட்டான்!'
- என் கணவன்!
"அவன் இரு கண்களில் காதல் பொங்க,
அவன் இரு கரங்களில் என் இடையை பிடித்து
என்னை அவன் முகத்திற்கு நேரே உயர்த்தி,
தரையில் இருந்து என் பாதத்தை பிரித்து,
வரண்டு போகும் என் உதடுகளை
அவன் உதடுகளால் நனைத்து,
இறுகிய என் கண்கள் திறக்கும் முன்,
என்னை அவன் மார்பில் அணைத்து
இருவரும் கட்டிலில் வீழ்வோம்!" - என்றான் காதலன்!
"அவன் இரு கண்களில் கோபம் பொங்க,
அவன் ஒரு கரம் என் கழுத்தை இறுக்கிப் பிடித்து,
தரையில் இருந்து என் பாதத்தை பிரித்து,
மறு கரத்தின் விரல்களை என் கன்னத்தில் பதித்து,
என் முகத்தில் வெறுப்புடன் உமிழ்ந்து,
கசங்கிய காகிதம் போல் தூக்கி எறிந்தான்!" - என் கணவன்!
#காதலனை பிரிந்து,
கட்டாயத்தில் வந்த கணவன் என்பவனால்,
காலம் முழுதும் கற்பழிக்கப் படும்,
பெயர் தெரியா கள்ளி ஒருவள்,
என் மனதில் தோன்றி, வரைந்த வரிகள்!
-