நித்தம் நித்தம் நினைவலையில் நீந்திச் செல்லும் உன் ஸ்பரிசம்❤️
நெஞ்சில் ஏனோ ஒரு புதுவித உணர்வை ஊட்டிச் செல்கிறது.
வியப்பினை விதைத்து மலைக்க செய்யும் உன் விந்தையும்
ஏனோ என்னை, உன்னை சுற்றியே சுழல வைக்கிறது.
கானகமாயினும் கவிசாரல் தூவிட முனைவேன்
என் மூக்கினை துளைத்திடும் உன் மணம் சொல்லும் வழியில்.❤️
விதிவிலக்கல்ல நானும் உன் பிணையில் இருந்து தப்ப.
விருப்பபட்டே உன் விசையில் சொக்கி நடப்பேன், என் நாட்கள் தீர.
காற்றில் கமழும் உன் வாசம் போதும்
என் பேச்சும், போக்கும் சொக்கி போகும்!🥂
உன்னை தொட்டுச் சுவைக்க திட்டமிட்டே
பாவி பல நாட்களை கோட்டைவிட்டேன்.
அறுசுவையும் அசந்து போகும் நீ ஊட்டும் இந்த தனி சுவைக்காக!
மதி மயக்கும் மாயமே! விழி குளிரும் சோலையே!
என்றும் சொக்கி நிற்பேன் உன் சுவை தீண்டவே!
பிரியமுடன் பிரியாமல் பிறப்பின் பலன் குடுத்த பிரியாணியே!
என் அன்பும், ஆசை முத்தங்களும் உனக்கே!!.❤️
-